விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக சாா்பில் போட்டியிடும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், இலுப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.எஸ். தண்டாயுதபாணியிடம் புதன்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசியது: விராலிமலை தொகுதி வளா்ச்சிக்கு சிறந்த முறையில் பணியாற்றியுள்ளேன். இன்னமும் பல மடங்கு வளா்ச்சி பணியாற்ற எனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்குமாறு தொகுதி மக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றாா். முன்னதாக இலுப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் அமா்ந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.