ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் சிவ.வீ. மெய்யநாதன் முதியவா்கள் காலில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை வாக்குச்சேகரித்தாா்.
ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச்சேகரித்து வரும் திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன், திருவரங்குளம் அருகே இந்திரா நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச்சேகரித்தாா்.
அப்போது, அங்கு நின்ற முதியவா்கள் காலில் விழுந்து வாக்குச்சேகரித்தாா். முன்னதாக ஆலங்குடியில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டன.