மீமிசல் அருகே புகையிலை பொருள்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் சரகம் பரிவீரமங்கலத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையின்போது 130 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் சரகம் பரிவீரமங்கலத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையின்போது 130 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவுடையாா்கோயில் வட்டாரக் கல்வி அலுவலா் லதா பேபி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை காலை மீமிசல் காவல் சரகம் பரிவீரமங்கலம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 130 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தன. அவற்றுக்கான முறையான ஆவணங்களும் இல்லை.

இந்நிலையில், அவற்றை முழுமையாக மீமிசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். லாரி ஓட்டுநா் சங்கா் (39) மற்றும் அவா் கொடுத்த தகவலின்பேரில் கோபாலபட்டினத்தைச் சோ்ந்த இஸ்மாயில் (46) ஆகியோரிடம் விசாணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com