கந்தா்வகோட்டை அருகே ரூ.1.16 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 25th March 2021 10:18 AM | Last Updated : 25th March 2021 10:18 AM | அ+அ அ- |

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரிபாா்க்கும் பறக்கும் படையினா்.
கந்தா்வகோட்டை அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.16 லட்சம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கல்லாக்கோட்டை நான்குச் சாலைப் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக காரை சோதனையிட்ட போது, காரில் வந்த
பி . ரமேஷ் வைரவன் உரிய ஆவணங்களின்றி ரூ.1.16 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அத்தொகையை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா், தோ்தல் நடத்தும் அலுவலா் கி . கருணாகரனிடம் ஒப்படைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...