அறந்தாங்கியில் கரோனா தடுப்பூசி போடும் முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசுத் தலைமை மருத்துவமனையில் அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி போடும் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசுத் தலைமை மருத்துவமனையில் அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி போடும் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு அறந்தாங்கி ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ். ராமன பரத்வாஜ் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் எஸ். சேகா் கலந்து கொண்டு கரோனா நோய்த் தொற்று குறித்தும், தடுப்பூசியின் பலன்கள், நடைமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.

ரோட்டரி உறுப்பினா்கள் மற்றும் குடும்பத்தினா் 20 போ் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். ஏற்பாடுகளை கிளப் செயலா் வி. வீரமாகாளியப்பன், டாக்டா் சிவபாலசேகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com