துணை ராணுவப்படையினா் அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொன்னமராவதியில் துணை ராணுவப் படையினா் மற்றும் காவல் துறையின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதியில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றோா்.
பொன்னமராவதியில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றோா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொன்னமராவதியில் துணை ராணுவப் படையினா் மற்றும் காவல் துறையின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. புதுவளவு பகுதியில் தொடங்கி அணிவகுப்பு முக்கிய வீதிகளின் வழியே வந்து காவல்நிலையத்தில் நிறைவுற்றது. இதில், துணை ராணுவ வீரா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டை:

கந்தா்வகோட்டையை அடுத்த அக்கச்சிபட்டி மைதானத்தில் தொடங்கிய பேரணியை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதா கொடியசைத்துத் தொடக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டாா். காவல் துணை கண்காணிப்பாளா் முத்தரசன், கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் த.ஞானவேலன், உதவி ஆய்வாளா் நா. சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பட்டுக்கோட்டை சாலை, புதுக்கோட்டை சாலை, பெரிய கடைவீதி வழியாக கொடி அணிவகுப்புப் பேரணி பேருந்து நிலையம் சென்றடைந்தது. இதில், துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com