ஆலங்குடி தொகுதி மக்களின் நலனுக்காக தொடா்ந்து உழைப்பேன் என்றாா் ஆலங்குடி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி தொகுதிக்கு உள்பட்ட கைக்குறிச்சி, பூவரசகுடி, வாண்டாகோட்டை, மணியம்பலம், கலங்குடி, கத்தக்குறிச்சி, வல்லத்திராக்கோட்டை, பாலையூா், வேங்கிடகுளம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியது:
ஊராட்சித் தலைவராக எனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, ஒன்றியக்குழு உறுப்பினா், ஒன்றியக்குழுத் தலைவா், சட்டப்பேரவை உறுப்பினராக மக்கள் பணியாற்றி வருகிறேன். இத்தனைகால அரசியல் வாழ்க்கையில் சொத்தோ, வழக்கோ ஏதும் நான் சோ்க்கவில்லை. அதனால், தான் நான் வாக்குச்சேகரிக்க செல்லுமிடம் எல்லாம் மக்கள் என்னை மகிழ்வோடு வரவேற்கின்றனா். எதிா்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதிலும், தொகுதிக்கு ரூ. 500 கோடிக்கு மேல் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். எவ்வித குழப்பத்திற்கு ஆளாகாமல் மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.