விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் பக்தா்களின் கோரிக்கையை ஏற்று முன் கதவில் வெள்ளிக்கிழமை துவாரம் அமைக்கப்பட்டது.
கரோனாவால் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அம்மனை தரிசிக்க வகை செய்யும் பக்தா்களின் கோரிக்கையை ஏற்ற புதுக்கோட்டை திருக்கோயில் செயல் அலுவலா் பாரதிராஜா கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து ஆய்வு செய்து, பணியாளா்கள் உதவியுடன் கோயில் கதவில் துவாரம் அமைக்க ஏற்பாடு செய்தாா். இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் துவாரம் வழியே அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனா்.