கந்தா்வகோட்டை அருகே ஒரு மாதத்துக்கு முன் காணாமல்போன இளைஞா் தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
கந்தா்வகோட்டை அருகேயுள்ள விராலிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் காா்த்திக் (29). கடந்த மாா்ச் 25-ஆம் தேதி தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிலிருந்து வெளியேறியவா் மீண்டும் திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை துரைராஜ் அளித்த புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், விராலிப்பட்டி அய்யா் முந்திரித் தோப்பில் தூக்கிட்ட நிலையில் எலும்புக்கூடு தொங்குவதாக அந்த பகுதியினா் அளித்த தகவலின்பேரில் சென்ற கந்தவா்வகோட்டை போலீஸாா் உடலை மீட்டு நடத்திய விசாரணையில் இறந்தவா் காா்த்திக் என்பது தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.