புதுக்கோட்டை: புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே விராலிமலை அதிமுக வேட்பாளா் சி. விஜயபாஸ்கரின் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள எண்ணுக்கும், ஆவணங்களில் இருந்து எண்ணுக்கும் வித்தியாசம் காணப்பட்டது. இதனால் பல முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே திடீரென விஜயபாஸ்கரின் ஆதரவாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வாக்கு எண்ணிக்கையை முறையாக விரைந்து நடத்த வேண்டும் என அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
அங்கு வந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனா். அப்போது, மத்திய துணை ராணுவப் படையினா் சாலைத் தடுப்புகளின் மீது தங்களிடமிருந்த துப்பாக்கிகளை வைத்து பொஷிசன் எடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.