8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள வேலூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சின்னக்காளை என்கிற சேவுகன் (66). இவா், கடந்த ஆண்டு 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், சின்னக்காளையைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் த. அங்கவி ஆஜராகி வாதாடினாா்.

வழக்கு விசாரணை நிறைவில், மாவட்ட மகளிா் நீதிபதி ஆா். சத்யா செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். குற்றவாளி சின்னக்காளைக்கு போக்சோ சட்டத்தின் ஒரு பிரிவின்கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம், மற்றொரு பிரிவின்கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்துத் தீா்ப்பளிக்கப்பட்டது. சிறைத் தண்டனையை மட்டும் ஏககாலத்தில் அனுபவிக்கலாம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நிவாரண உதவியாக ரூ. 2.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com