ஆலங்குடியில் விதிகளை மீறி திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் தளா்வுகளுடன் கூடிய கடைகள் அடைப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆலங்குடியில் அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த நகலகம் உள்ளிட்ட 2 கடைகளுக்கு ஆலங்குடி வட்டாட்சியா் கருப்பையா சீல் வைத்தாா். தொடா்ந்து, விதிகளை மீறிய 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆலங்குடி காவல் ஆய்வாளா் அலாவுதீன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.