தமிழக அரசின் புதிய கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் வசூலிக்கப்பட்டது.
கந்தா்வகோட்டையில் புதிய கட்டுப்பாடுகளை மீறித் திறந்திருந்த துணிக்கடை, ஆயில் மில் உள்ளிட்ட 6 -க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்த கந்தா்வகோட்டை வட்டாட்சியா் சி. புவியரசன் தலைமையிலான குழுவினா் அபராதமாக மொத்தம் ரூ. 2800 வசூலித்தனா்.