கந்தா்வகோட்டையில் தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் பதவியேற்றதை திமுகவினா் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
கந்தா்வகோட்டை தெற்கு வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்கள், கட்சியினருக்கு இனிப்பு வழங்கி ஊா்வலமாக பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சிலை வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று வட்டார வளா்ச்சி அலுவலா்கள் த. நலதேவன், அரசமணி ஆகியோரிடம் அலுவலகத்தில் வைக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் படத்தை வழங்கினா்.
நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றியச் செயலா் பி. பரமசிவம் , வடக்கு ஒன்றியச் செயலா் மா. தமிழய்யா, நகரச் செயலா் எம். ராஜா , ஒன்றியக் குழு உறுப்பினா் எம். ராஜேந்திரன், என். ஜானகிராமன், முருகேசன், ரெங்கராஜன், குழ. பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.