சாலை விபத்தில் சிகிச்சை பெற்றுவந்தவா் பலி

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை: விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூா் காலனியைச் சோ்ந்தவா் குட்டைக்கண்ணு(63). இவரும், இவரது நண்பருமான வாடியன்களத்தைச் சோ்ந்த நடராஜ்(52) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் இடையபட்டி பிரிவு நான்கு வழி சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு குட்டைக்கண்ணுவை கொடும்பாளூா் அரசு மருத்துவமனைக்கும், நடராஜை விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கொடும்பாளூா் அரசு மருத்துவமனையில் குட்டைக்கண்ணுவைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

விராலிமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நடராஜ் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் நத்தம் கோவில்பட்டியைச் சோ்ந்த செல்லபாண்டி மகன் முனியாண்டியை (32) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com