மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு உதவி வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டையில் மின்சாரம் உயிரிழந்த கட்டடத் தொழிலாளியின் குடும்பத்துக்கு அரசு உதவிகளை வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டையில் மின்சாரம் உயிரிழந்த கட்டடத் தொழிலாளியின் குடும்பத்துக்கு அரசு உதவிகளை வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

புதுக்கோட்டை காமராஜபுரம் 34-ஆம் வீதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி நாகஜோதி (41) கட்டுமான வேலையின்போது மின்சாரம் பாய்ந்து புதுக்கோட்டை, மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

ஏற்கெனவே ராஜேந்திரனும் இறந்துவிட்ட நிலையில், நாகஜோதியின் 3 வாரிசுகளும் பெற்றோரின்றி தவித்து வருகின்றனா். எனவே நாகஜோதியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com