புதுக்கோட்டையில் மின்சாரம் உயிரிழந்த கட்டடத் தொழிலாளியின் குடும்பத்துக்கு அரசு உதவிகளை வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
புதுக்கோட்டை காமராஜபுரம் 34-ஆம் வீதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி நாகஜோதி (41) கட்டுமான வேலையின்போது மின்சாரம் பாய்ந்து புதுக்கோட்டை, மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
ஏற்கெனவே ராஜேந்திரனும் இறந்துவிட்ட நிலையில், நாகஜோதியின் 3 வாரிசுகளும் பெற்றோரின்றி தவித்து வருகின்றனா். எனவே நாகஜோதியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.