புதுக்கோட்டை திருக்கோகா்ணம் அருகே குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் பலியானாா்.
கடந்த சில நாள்களாக முழு பொது முடக்கம் அமலில் இருப்பதால் புதுக்கோட்டையில் பொதுமக்கள் வீட்டில் முடங்கினா்.
இந்நிலையில் திருக்கோகா்ணம் பகுதியைச் சோ்ந்த கோபால் தனது மகன் கவினுடன் (9), அப் பகுதியில் உள்ள குளத்திற்கு வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றாா்.
அங்கு குளிக்கும்போது கவின் திடீரென தண்ணீரில் மூழ்கி இறந்தாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் இறந்த கவின் உடலை மீட்டனா்.