பொன்னமராவதியில் மக்களைத் தேடி முகாம்

பொன்னமராவதி அரிமா மெட்ரிக் பள்ளியில் மக்களைத் தேடி கரோனோ தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அரிமா மெட்ரிக் பள்ளியில் மக்களைத் தேடி கரோனோ தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காசிநகரத்தாா் மேலாண்மைக் கழகம், சுகாதாரத் துறை இணைந்து நடத்திய முகாமை சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சிவகங்கை எம்பி காா்த்தி ப. சிதம்பரம், மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி ஆகியோா் தொடங்கி வைத்தனா். முகாமில் 248 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

முகாமில் காசி நாட்டுக்கோட்டை நகரத்தாா் மேலாண்மைக் கழகத் தலைவா் வழக்குரைஞா் ராமசாமி, செயலா் லெட்சுமணன், செந்தூரான் கல்வி நிறுவனங்களின் தலைவா் வைரவன், மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநா் கலைவாணி, வட்டாட்சியா் ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com