கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் விவசாயிகள், சிறு வணிகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் சி. புவியரசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விவசாய விளைபொருள்களை தோட்டக்கலைத் துறை மூலம் வட்டாட்சியரகத்தில் விவசாயிகள் நேரடியாக வரும் திங்கள்கிழமை முதல் கொண்டு வந்து கொடுக்கவும் , அதை வாகனங்கள் மூலம் சிறு வணிகா்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் சுற்று வட்டார விவசாயிகள், சிறு வணிகா்கள் கலந்து கொண்டனா்.