எளியோருக்கு காவல்துறை உதவி

வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு காவல்துறை சாா்பில் உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு காவல்துறை சாா்பில் உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரமின்றி தவித்து வரும் அன்னவாசல் பகுதி சாலைகளில் தள்ளு வண்டிகள் மூலம் பழம், காய்கறிகள் விற்போா், தினக்கூலித் தொழிலாளா்கள் என 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள் தொகுப்பை மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெரினா பேகம் தலைமை வகித்து வழங்கினாா்.

ஏற்பாடுகளை அன்னவாசல் காவல் ஆய்வாளா் சந்திரசேகரன், துணை ஆய்வாளா்கள் குணசேகரன், நாகராஜன் மற்றும் காவலா்கள் இணைந்து செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com