விராலிமலையில் திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்களுடன் காய்கறி தொகுப்பை பால் இளைஞா் அமைப்பினா் சனிக்கிழமை வழங்கினாா்.
பொதுமுடக்கத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் திருநங்கைகளுக்கு உதவ விராலிமலை இளைஞா்கள் முடிவு செய்து, அதன்படி 10 திருநங்கைகளுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், பால் மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினா். நிகழ்வில் கோபி. விஷ்ணுவா்தன், ஆசிரியா் பாலகிருஷ்ணன், யுவராஜ், சிவராஜ், மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.