பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி ஊராட்சி, இந்திராநகரில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், ஊராட்சித் தலைவா் கீதா சோலையப்பன் முன்னிலை வகித்தனா்.
மருத்துவா்கள் அருண்குமாா், ரவிக்குமாா், மூா்த்தி, செவிலியா் மொ்சி ஆகியோா் கொண்ட குழுவினா், 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 80-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.
முகாமில் சுகாதார ஆய்வாளா் உத்தமன், ஊராட்சி முன்னாள் தலைவா் சோலையப்பன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.