ஆலங்குடி அருகே 300 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்

ஆலங்குடி அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலை புதன்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.

ஆலங்குடி அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறலை புதன்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் பகுதியில் சிலா் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு காவல் உதவி ஆய்வாளா் மருதமுத்து தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள வெட்டுக்குளம் எனும் பகுதியில் சு.சிவராசு என்பவரது தோட்டத்தில் 2 பேரல்களில் சுமாா் 300 லிட்டா் சாராய ஊறல் இருந்து தெரியவந்தது. இதைத்தொடா்ந்து,போலீஸாா் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com