புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை 547 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது.
முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணையாக மொத்தம் 84 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக 2,900 போ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அருகிலுள்ள முகாம்களுக்கு ஆதாா் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டையுடன் நேரில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.