புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மயானத்திற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சி புதுவலசல் கிராம மக்கள் மயானம் செல்ல அப்பகுதியில் உள்ள குளத்தை கடக்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் பலனில்லையாம். இந்நிலையில், புதன்கிழமை மூதாட்டியின் சடலத்தை கொண்டு செல்ல முடியாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற கறம்பக்குடி வட்டாட்சியா் விஸ்வநாதன், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத்தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனா். இதனால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.