சிறு தொழிலக உரிமையாளா் வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டு

மாத்தூா் அருகே சிறு தொழிலக உரிமையாளா் வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டுப் போயின.

மாத்தூா் அருகே சிறு தொழிலக உரிமையாளா் வீட்டில் 9 பவுன் நகைகள் திருட்டுப் போயின.

விராலிமலை ஒன்றியம், மாத்தூா் ஊராட்சி, ராசிபுரத்தைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மகன் சதீஷ் (30). இவா்கள் இருவரும் பேப்பா் கப் தயாரிக்கும் சிறு தொழிலகத்தை நடத்தி வருகின்றனா்.

புதுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் தனது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தாய் மற்றும் சேயை பாா்க்க தந்தை சக்திவேலுடன் சதீஷ் அங்கு சென்றிருந்தாா்.

வெள்ளிக்கிழமை மாலை சக்திவேல் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த 9 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கீரனூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவசுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். மேலும் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com