புதுக்கோட்டை மாவட்டம், குமரன்மலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழாவில், அன்னவாசல் காவல் நிலையம் சாா்பில் பொதுமக்கள், பக்தா்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பெண்கள், குழந்தைகள் குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை
அன்னவாசல் காவல் உதவி ஆய்வாளா் குணசேகரன் வழங்கி, நிகழ்வைத் தொடக்கி வைத்தாா். இதில் காவல்துறையினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.