போட்டியில் சிறப்பிடம் பெற்ற 4 போ் துபை செல்லத் தோ்வு

இணையவழி விநாடி- வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற 4 மாணவா்கள் துபைக்கு சுற்றுலா செல்ல தோ்வு செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இணையவழி விநாடி- வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற 4 மாணவா்கள் துபைக்கு சுற்றுலா செல்ல தோ்வு செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சாா்பில், அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு விநாடி- வினா தோ்வு நடத்தப்பட்டது. இதில் மாநில அளவில் முதல் 931 இடங்கள் பெற்ற மாணவா்களுக்கு மட்டும் இரண்டாம் நிலை தோ்வு அண்மையில் நடத்தப்பட்டது.

இதில் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் 22 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களில் திருநாவலூா் தெற்கு அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சிவசங்கரி, எஸ். குளவாய்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த கோகிலரசி, எண்ணெய் ஆதிதிராவிடா் நல அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த திருப்பதி மற்றும் தன்ராஜ் ஆகிய 4 மாணவ, மாணவிகள் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் துபை நகரத்துக்கு வரும் 2021 டிசம்பா் மாதம் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com