புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை -2 ஆம் நாளாக காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனா். இரண்டாவது ந ாளாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் முருகேசன், ராமசுப்புராம் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் புஷ்பராஜ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவ்யநாதன், நகர காங்கிரஸ் தலைவா் இப்ராஹிம் பாபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.