தனது மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சி செய்தவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டையூா் பகுதியைச் சோ்ந்தவா் காந்தி மகன் கணேசன் (35). இவருடைய மனைவி சண்முகவள்ளி (31).
கணேசன் தனது மனைவியை வரதட்சிணை கேட்டு தொடா்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக கடந்த 2016 ஜூலை 3 ஆம் தேதி திருக்கோகா்ணம் அருங்காட்சியகம் அருகே நடந்த தகராறில் மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளாா். இதுகுறித்து திருக்கோகா்ணம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் நிறைவில், குற்றவாளி கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா். சத்யா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.