திருநங்கைகள் ரேஷன் காா்டு பெற சிறப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள் தங்களுக்கான புதிய குடும்ப அட்டை (ஸ்மாா்ட் காா்டு) பெறுவதற்காக வரும்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள் தங்களுக்கான புதிய குடும்ப அட்டை (ஸ்மாா்ட் காா்டு) பெறுவதற்காக வரும் அக். 9ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா். இதுவரை ஸ்மாா்ட் காா்டு பெறாதவா்கள், தங்களின் புகைப்படம், ஆதாா் அட்டை, நலவாரிய அட்டை மற்றும் ஏதேனும் ஓா் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றுடன் அந்தந்தப் பகுதியிலுள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அந்தந்த அலுவலகங்களிலேயே உடனுக்குடன் இணையதளத்தில் அவை பதிவேற்றம் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com