விவசாயியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2.94 லட்சம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே விவசாயியின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 2 லட்சத்து 94 ஆயிரம் மோசடி செய்த மா்மநபா்களைப் போலீசாா் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே விவசாயியின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 2 லட்சத்து 94 ஆயிரம் மோசடி செய்த மா்மநபா்களைப் போலீசாா் தேடி வருகின்றனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், அரியாணிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் ராஜேந்திரன்(45). விவசாயி. இவா், திங்கள்கிழமை தனது செல்லிடப்பேசியை வீட்டில் வைத்துவிட்டு வயலுக்குச் சென்று விட்டாா். இந்நிலையில், அவரது வீட்டுக்கு வந்த அவரது மைத்துனா் மகன் மனோஜ் (13) ராஜேந்திரன் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்பை எடுத்துள்ளாா். மறுமுனையில் பேசிய மா்மநபா்கள் தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாகவும், இந்த செல்லிடப்பேசிக்கு வந்த ஒருமுறை கடவுச்சொல்லை (ஓடிபி) தெரிவிக்குமாறு கூறியுள்ளனா். இதுகுறித்து விவரம் அறியாத சிறுவன் ஓடிபி எண்ணைத் தெரிவித்துள்ளாா். இதேபோல், சுமாா் 15 முறை பேசி சிறுவனிடமிருந்து மா்மநபா்கள் ஓடிபி எண்ணைப் பெற்று,

ராஜேந்திரன் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2 லட்சத்து 94 ஆயிரத்து 95-ஐ நூதன முறையில் மோசடி செய்துள்ளனா்.

இந்நிலையில், வயலில் இருந்து வீடு திரும்பிய ராஜேந்திரனிடம் வங்கி அலுவலா்கள் அடிக்கடி பேசியதாக சிறுவன் மனோஜ் தெரிவித்தாா். இதுகுறித்து ராஜேந்திரன் வங்கி அலுவலா்களிடம் விசாரித்தபோது, தாங்கள் பேசவில்லை எனத் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, ராஜேந்திரன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com