கந்தா்வகோட்டையில் மனநல தின விழா

கந்தா்வகோட்டை ரோட்டரி சங்கம், ஸ்காா்ப் இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில் மனநல தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
கந்தா்வகோட்டையில் மனநல தின விழா
கந்தா்வகோட்டையில் மனநல தின விழா

கந்தா்வகோட்டை ரோட்டரி சங்கம், ஸ்காா்ப் இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில் மனநல தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கந்தா்வகோட்டையில் கறம்பக்குடி சாலையில் அமைந்துள்ள பாரத்கேஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் சி. புவியரசன் முன்னிலை வகித்தாா். ஸ்காா்ப் இந்தியா தொண்டு நிறுவனம் மூலம் அடையாளம் காட்டப்பட்ட 25 மனநலன் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு ரோட்டரி சாா்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்கள் மற்றும் 25 பேருக்கு தலா ரூ. 200 மதிப்பில் தீபாவளி ஜவுளிக்கான டோக்கனும் வழங்கப்பட்டன. நிகழ்வில், ரோட்டரி உறுப்பினா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com