உ.பி வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட்ட 5 விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளா் எஸ்.சி. சோமையா தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், விவசாயிகள் சங்கத்தின் தேசியக் குழ உறுப்பினா் மு. மாதவன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.