பொன்னமராவதி அரிமா மெட்ரிக். பள்ளியில் ‘வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்’ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். நிகழ்வில், சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பங்கேற்று குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது: ஏழை எளியோா் நோய் வருவதற்கு முன்னரே ஆரம்பக் கட்டத்திலேயே நோயின் அறிகுறியைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் முழுவதுமாக குணமடையும் வாய்ப்பு உருவாகும் என்றாா் அவா்.
நிகழ்வில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அா்ஜுன் குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் தண்டாயுதபாணி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, புதுகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூபதி ஆகியோா் பங்கேற்றனா். வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நன்றி கூறினாா்.