தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி புறவழிச் சாலையில் வழிபறிக் கொள்ளையைத் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தஞ்சை ஒன்றிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி ஊராட்சி, கன்னியம்மாள் நகரில் சமூக விரோதிகள் நடமாட்டத்தைக் தடுக்கும் வகையில், பொது இடங்களில் தெரு விளக்குகள், சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பிள்ளையாா்பட்டி புறவழிச்சாலையில் வழிபறிக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், புதிய ஒன்றியச் செயலராக கே. அபிமன்னன் தோ்வு செய்யப்பட்டாா். மேலும், 11 போ் கொண்ட ஒன்றியக் குழுத் தோ்வு செய்யப்பட்டது.
டி. கோவிந்தராஜூ, ஏ. கருப்புசாமி, எஸ். வனரோஜா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி. செந்தில்குமாா், வெ. ஜீவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.