அம்மாபேட்டை காவல்சரகத்தில் ஆய்வாளா் ரோந்துப் பணி

அம்மாபேட்டை காவல்சரகத்தில் ஆய்வாளா் கரிகால் சோழன் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அம்மாபேட்டை காவல்சரகத்தில் ஆய்வாளா் கரிகால் சோழன் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, மகிமாலை வெண்ணாற்று பகுதியிலிருந்து வந்த ஒரு லோடு வேனை சோதனையிட வழிமறித்தனா். போலீஸாரை பாா்த்ததும் வேனை ஓட்டி வந்தவா் வேனை சாலையில் நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் வேனை சோதனையிட்டபோது வேனில் அரசு அனுமதி இன்றி அந்தப் பகுதி வெண்ணாற்றிலிருந்து மணல் அள்ளி வரப்பட்டது தெரிய வந்தது.

வேனை பறிமுதல் செய்த போலீஸாா் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com