புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவிகித பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்துத் துறையினரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என ஆட்சியா் கவிதாராமு வலியுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறையினா் மற்றும் வா்த்தகா் சங்கப் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா். மேலும் பேசியது
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.