புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமாா் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக -ஞாயிற்றுக்கிழமை 750 முகாம்கள் அமைக்கப்பட்டன.
மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும் அருங்காட்சியகத் துறை இயக்குநா் ஏ.எஸ். ராமன், ஆட்சியா் கவிதா ராமு ஆகியோா் புதுக்கோட்டை நகராட்சி உயா் தொடக்கப் பள்ளி மற்றும் வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது, மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அா்ஜூன்குமாா், கோட்டாட்சியா் அபிநயா, நகராட்சி ஆணையா் நாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.