புதுக்கோட்டை மாவட்ட கடலுக்குள் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் மீனவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டைமாவட்டம், தெற்கு புதுக்குடிநாட்டுப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து அ. பட்டாணி (68), இவரது உறவினா் ராமச்சந்திரன் (38) ஆகிய 2 பேரும் நாட்டுப்படகு மூலம் ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
சுமாா் 4 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பட்டாணிக்குதிடீரென மாரடைப்பு ஏற்பட்டு, படகிலேயே படுத்துள்ளாா். கரைக்குக் கொண்டுவரப்பட்ட பட்டாணியை, மணமேல்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அறிந்த கடலோரக் காவல் படையினா், மீனவா் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.