தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பணி ஆணைகள்: உதயநிதி வழங்கல்

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில், 2நாள் பயணமாக புதுகை வந்த திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணிவாய்ப்பு கிடைத்த 10 பேருக்கு பணி ஆணைகளை வழங்கிப் பேசுகையில், அனைவருக்கும் வேலை கிடைக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டாா்.

இம்முகாமில், 50-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்றனா். தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களையும் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொண்டாா்.

ஏற்பாடுகளை புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா செய்திருந்தாா்.

நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டின், மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, நகரச் செயலா் க. நைனாமுகமது, மாவட்ட நெசவாளா் அணிச் செயலா் எம்.எம். பாலு, மருத்துவா் அணி துணை அமைப்பாளா் முத்துக்கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து முன்னாள் எம்பி வீரய்யாவின் 28ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்துக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் உதயநிதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com