கந்தா்வகோட்டையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் திருவுருவச் சிலையை, திமுத இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
கந்தா்வகோட்டையில் தஞ்சாவூா் - புதுக்கோட்டை சாலையில் தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் திருவுருவச் சிலையை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணிச்செயலருமான உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து அருகில் இருந்த 70 அடி உயரக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் கந்தா்வகோட்டை ஒன்றிய, நகர திமுக நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.