புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சேதுராயனேந்தல் கிராமத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற புதிய கிளை தொடக்கம் மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் கொடியை ஏற்றி வைத்தாா். ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன், ஒன்றியத் தலைவா் வீராச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், எட்டியத்தளி முதல் சுப்பிரமணியபுரம் வரை செல்லும் சாலையை அகலப்படுத்தி மருதங்குடி பெரிய ஏரிக் கரையை பலப்படுத்தி இருவழி சாலையாக மாற்றி தர வேண்டும்.
மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட சேதுராயன்ஏந்தல் மயானத்துக்குச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். சேதுராயன்ஏந்தல் அங்கன்வாடி கட்டடத்தை புதிதாக அமைத்து தர வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.