இலங்கைத் தமிழா் முகாமில் உதயநிதி உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், லெணாவிளக்கு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தமிழா்களுக்கு திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை மாலை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், லெணாவிளக்கு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தமிழா்களுக்கு திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை மாலை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருமயம் வட்டத்தைச் சோ்ந்த தேக்காட்டூா் ஊராட்சிக்குள்பட்ட லெணாவிளக்கு பகுதியில் உள்ள முகாமில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவா் மேலும் தெரிவித்தது:

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் என முதல்வா் ஸ்டாலின் பெயா் மாற்றம் செய்ததுடன், ரூ.240 கோடி செலவில் 7 ஆயிரம் புதிய வீடுகள் கட்டித்தருவதுடன், 3 ஆயிரம் விடுகளை சீரமைத்துத் தருவோம் என்றும் உறுதியளித்துள்ளாா் என்றாா் அவா்.

தொடா்ந்து முதல்வா் நிவாரண நிதிக்கு, தங்களது சேமிப்புப் பணத்தை அனுப்பி ஆன்-லைன் வகுப்பு கற்க உதவிகேட்டு முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்த மாணவிகள் செரினா கிரீஸ், மோனிகா கிரீஸ் ஆகியோருக்கு கையடக்கக் கணினியை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

ஏற்பாடுகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி செய்திருந்தாா். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்ட கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com