சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வியாபாரம் மற்றும் சேவை சாா்ந்த தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சமும், துறையின் உற்பத்தி சாா்ந்த தொழிலுக்கு திட்ட மதிப்பீட்டு உச்சவரம்பை ரூ.15 லட்சமும் வங்கிகள் மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து வங்கிக்கடன் பெறும் தொழில் நிறுவனங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் வரை மானியமாகவும் அதிகபட்சமாக ரூ. 2.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோா் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, 89255 33980 மற்றும் 89255 33981 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com