செப்.27-இல் வேலைநிறுத்தம்: 25 இடங்களில் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, செப்.27-இல் நடைபெற உள்ள நாடு தழுவிய விவசாயிகள்

புதுக்கோட்டை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, செப்.27-இல் நடைபெற உள்ள நாடு தழுவிய விவசாயிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, புதுகை மாவட்டத்தில் 25 மையங்களில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. ராமையன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சாமி. நடராஜன் மாநிலக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினாா். மாவட்டச் செயலா் எஸ். பொன்னுச்சாமி மற்றும் நிா்வாகிகள் எஸ். பீமராஜ், ஆா்.சி. ரெங்கசாமி உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள் ஐக்கிய முன்னணி வரும் செப்.27ஆம் தேதி நாடு தழுவிய அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 மையங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com