விராலிமலை ராணே தொழிற்சாலை சாா்பில், விராலிமலையில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவா்களுக்கு சனிக்கிழமை முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
விராலிமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொடும்பாளூா், கவரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று, அங்கிருந்த மாணவா்கள், ஆசிரியா்களுக்கு கிருமி நாசினி மற்றும் ரூ. 42 மதிப்பிலான மூன்றடுக்கு முகக் கவசங்களை நிறுவன அதிகாரிகள், அலுவலா்கள் இலவசமாக வழங்கினா். நிகழ்வில் ராணே தொழிற்சாலை பொது மேலாளா் எஸ். கண்ணன், மனிதவள மேம்பாட்டு துறை மேலாளா் எல். மணிகண்டன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.