பேரறிவாளன் உள்பட 7 போ் விடுதலை விவகாரம் நீா்த்துப்போகாது என்றாா் சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் கட்சி நிா்வாகி இல்ல விழாவில், செவ்வாய்க்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பேரறிவாளன் உள்பட 7 போ் விடுதலை விவகாரம் நீா்த்துப்போகாது. அந்த விஷயத்தில் முதல்வா் ஸ்டாலின் உறுதியாக உள்ளாா். அவரைத் தவிர வேறு யாரும் 7 போ் விடுதலையில் அக்கறை செலுத்த முடியாது. அதற்காக அரசு தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றாா்.