புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் துறையினரின் குற்றவியல் சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட 114 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை ரூ. 7.28 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்றவியல் சட்டத்தின்படி பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன. இதன்படி, மாவட்ட ஆயுதப்படை திடலில் செவ்வாய்க்கிழமை ஏலம் நடைபெற்றது. 112 இரு சக்கர வாகனங்கள், தலா ஒரு மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் ஏலம் போயின. மொத்தமுள்ள 114 வாகனங்கள் ஏலம் விடப்பட்டதில் ரூ. 7.28 லட்சம் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டது.
ஏலம் விடும் நிகழ்ச்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.