மனைவியைக் கொன்றவா் குண்டா் சட்டத்தில் கைது

மனைவியை கொன்றவா் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மனைவியை கொன்றவா் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் காவல் சரகத்துக்குள்பட்ட விட்டாநிலைப்பட்டியைச் சோ்ந்த வேளாங்கண்ணி (45) என்பவா், குடும்பத் தகராறில் தனது முதல் மனைவி மதலையம்மாளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தாா். படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மதலையம்மாள் கடந்த மாதம் 9ஆம் தேதி உயிரிழந்தாா்.

இச்சம்பவத்தில் வழக்குப் பதிந்த இலுப்பூா் போலீஸாா் வேளாங்கண்ணியைக் கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் அளித்த பரிந்துரையை ஏற்று வேளாங்கண்ணியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை சிறையில் இருந்த வேளாங்கண்ணி, வெள்ளிக்கிழமை திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com